என்னால் தாய்க்கும் தாய் நாட்டிற்கும் சேவை செய்யாமல் இருக்க முடியாது என்று மனைவியிடம் கூறிவிட்டேன்: சோம்நாத்!!

Read Time:2 Minute, 3 Second

f1ac9574-2ee9-4db9-98e6-53be8d94a248_S_secvpfஎன்னால் தாய்க்கும் தாய் நாட்டிற்கும் சேவை செய்யாமல் இருக்க முடியாது என்று மனைவியிடம் கூறினேன் என்று ஆம் ஆத்மி முன்னாள் சட்ட மந்திரி சோம்நாத் பாரதி தெரிவித்துள்ளார்

டெல்லி மாநிலத்தில், ஆம் ஆத்மியின் முந்தைய 49 நாள் ஆட்சியின்போது சட்ட மந்திரியாக பதவி வகித்தவர் சோம்நாத் பாரதி. வக்கீலான இவர், தற்போது மாளவியா நகர் தொகுதியின் எம்.எல்.ஏ. ஆகவும் உள்ளார். இவர் மீது, அவருடைய மனைவி லிபிகா சில நாட்களுக்கு டெல்லி மகளிர் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், ‘‘என்னையும், எனது குழந்தைகளையும் மன, உடல் ரீதியாகவும், திட்டியும் எனது கணவர் தொல்லை கொடுத்து வருகிறார். சித்ரவதையும் செய்கிறார். கணவரும், அவருடைய ஆதரவாளர்களும் தொடர்ந்து எங்களுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே எனது கணவரின் சித்ரவதைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்’’ என புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து சோம்நாத் பாரதி கூறும் போது ”நானும் என் மனைவியும் 5 ஆண்டுகளுக்கு தனித்தனியாக பிரிந்து வாழ்கிறோம். எனவே என் மீதான புகார்கள் பொய்யானவை. மேலும் லிபிகா என் தாயையும், அரசியலையும் விட்டுவிடும் படி கேட்டார். ஆனால் என்னால் தாய்க்கும் தாய் நாட்டிற்கும் சேவை செய்யாமல் இருக்க முடியாது என்று அவரிடம் கூறிவிட்டேன்” என தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாயின் கள்ளக்காதலனின் மூர்க்கத்தனமான தாக்குதலில் 4 வயது சிறுவன் பலி!!
Next post உணவே விஷம்: காம்ப்ளானில் நூற்றுக்கணக்கான இறந்த புழுக்கள்- பரிசோதனைக்கு உத்தரவு!!