ஸ்ரீரங்கத்தில் மாயமான காவலாளி உறையூரில் மர்ம சாவு!!

Read Time:1 Minute, 30 Second

3eaecc91-6656-40fb-8599-c8e9572e2832_S_secvpfஸ்ரீரங்கம் ராகவேந்திரா தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 58). காவலாளியான இவர் கடந்த 12–ந் தேதி காலையில் நடைபயிற்சிக்காக சென்றுள்ளார். பின்னர் மாலை வரை வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அந்த பகுதி முழுவதும் தேடினர்.

அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் ஸ்ரீரங்கம் போலீசார் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான மோகனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை உறையூர் அண்ணாமலைநகர் பகுதியில் ஒரு குப்பை தொட்டி அருகில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக உறையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் பிணமாக கிடந்தவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடந்தவர் ஸ்ரீரங்கத்தில் மாயமான மோகன் என்பது தெரிய வந்தது.

மோகனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த போலீசார் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரத்த சோகை நோயால் அவதிப்படும் 5 வயது சிறுமி: கலெக்டரிடம் பெற்றோர் மனு!!
Next post சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய்–மகள் உள்பட 4 பேர் தீக்குளிக்க முயற்சி!!