வாழப்பாடி அருகே கள்ளக்காதலனுடன் வாழ்ந்து வந்த இளம்பெண் மர்ம சாவு!!

Read Time:2 Minute, 37 Second

f529392a-1bbf-4dee-b838-0ff41bd5ec21_S_secvpfசேலம் கொல்லப்பட்டியை சேர்ந்த சந்தோஷ் குமாரின் மனைவி சாந்தி (வயது 35). இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் கணவரை பிரிந்து விட்டார்.

இவருக்கும் ஆத்தூரை அடுத்த கல்யாணகிரி பகுதியைச் சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் அர்ஜூனன் (40) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. தனியார் பஸ்சில் சாந்தி அடிக்கடி பயணம் செய்த போது டிரைவர் பழக்கமாகி கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பல இடங்களில் சந்தித்து பேசி வந்தனர். பின்னர் இருவரும் கணவன்–மனைவி போல வாழ்க்கை நடத்த தொடங்கினர். வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியில் தனியாக வீடு எடுத்து கடந்த இரண்டு மாதமாக அவர்கள் தங்கி இருந்தனர்.

அந்த வீட்டுக்கு அர்ஜூனன் அடிக்கடி வந்து செல்வார். அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வந்தனர். அவர்கள் உண்மையான கணவன்–மனைவி என்று அந்தப் பகுதி மக்கள் நினைத்து இருந்தனர். அவர்களது வாழ்க்கையில் இன்று இடி விழுந்தது போன்ற சம்பவம் நடந்து விட்டது.

இன்று காலை வீட்டு முன்பு சாந்தி தீயில் கருகி கரிக்கட்டையாக பிணமாக கிடந்தார். அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது எரித்து கொல்லப்பட்டாரா? என்று தெரியவில்லை.

அவரது மர்ம சாவு குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வாழப்பாடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். சாந்தி மர்ம சாவு குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவருடன் வாழ்க்கை நடத்தி வந்த தனியார் பஸ் டிரைவரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு தான் அவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது தெரிய வரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திண்டிவனத்தில் கோவிலில் சாமி கும்பிட்டபோது தீப்பிடித்து உடல் கருகிய பெண்!!
Next post கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை: இளம்பெண் மர்மச்சாவு-தந்தை போலீசில் புகார்!!