உசிலம்பட்டி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை எரித்துக் கொன்ற சப்–இன்ஸ்பெக்டர் மனைவி!!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உ.வாடிப்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி பில்லியம்மாள் (வயது 40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு செல்வம் இறந்து போனார். இதையொட்டி பில்லியம்மாள் ஆடுமேய்த்து குழந்தைகளை வளர்த்து வந்தார்.
இந்தநிலையில் அவருக்கும் உத்தப்பநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் பூங்கொடி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த தகவல் பூங்கொடியின் மனைவி குணசுந்தரிக்கு தெரியவந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த குணசுந்தரியும், உறவினர் ஒருவரும் நேற்று முன்தினம் இரவு உ.வாடிப்பட்டிக்கு சென்று பில்லியம்மாளிடம் தகராறு செய்துள்ளனர். பூங்கொடியுடனான தொடர்பை விட்டு விடுமாறு எச்சரித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து திடீரென்று அங்கு இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து பில்லியம்மாள் மீது ஊற்றி தீ வைத்தனர். இதில் உடல் முழுவதும் தீப்பிடித்து பில்லியம்மாள் படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர் உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பில்லியம்மாள் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து பில்லியம்மாளின் உறவினர் ராமன் கொடுத்த புகாரின் பேரில் உத்தப்பநாயக்கனூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக சப்–இன்ஸ்பெக்டர் பூங்கொடி, அவரது மனைவி குணசுந்தரி, கள்ளக்காதலுக்கு உதவியாக இருந்த அதே ஊரை சேர்ந்த கண்ணன், கவிதா உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்ற னர்.
Average Rating