காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: வெல்டருடன் ஆசிரியை போலீசில் தஞ்சம்!!

Read Time:1 Minute, 52 Second

680363b8-7af2-4146-a5a5-d6be523225cb_S_secvpfஅங்குள்ள திருவாடனை ஆரியகுடியை சேர்ந்த விக்னேஷ் (25) என்பவரை சந்தித்தார். விக்னேஷ் பாலிடெக்னிக் முடித்து விட்டு வெல்டராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் சத்யாவுக்கும், விக்னேசுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அதுவே காதலாக மாறியது.

இவர்களின் காதல் விவகாரம் சத்யாவின் தாய் மற்றும் அண்ணனுக்கு தெரியவந்ததும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. காதலுக்கு தடைபோட்டு சத்யாவை கண்காணித்தனர்.

ஆசிரியை பயிற்சி முடித்த பின்னர் சத்யா தேவக்கோட்டையில் உள்ள காந்தி நகருக்கே சென்று விட்டார். ஆண்டுகள் பலவான பின்னரும் மகள் காதலனுடன் தொடர்பில் இருப்பதை அறிந்த தாய் மற்றும் அண்ணன் உடனடியாக திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்தனர்.

அதன்படி மாப்பிளை பார்க்கும் படலம் தீவிரமாக நடந்தது. இதனால் காதல் ஜோடி கலக்கம் அடைந்தனர். இனியும் காலம் கடத்தினால் பிரித்து விடுவார்கள் என்று எண்ணிய காதல் ஜோடி கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தனர்.

இன்று காலை கோவை ஈச்சனாரி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதல் திருமணம் செய்து கொண்ட தங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்று கோவை ஐ.ஜி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யோகா செய்வது மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பயிற்சி அளிக்கும் இஸ்லாமிய பெண்!!
Next post செங்குன்றத்தில் நில புரோக்கர் படுகொலை: 4 பேர் கும்பல் தாக்குதல்!!