செங்குன்றத்தில் நில புரோக்கர் படுகொலை: 4 பேர் கும்பல் தாக்குதல்!!

Read Time:3 Minute, 49 Second

செங்குன்றத்தை அடுத்த அம்பேத்கர் நகர், பெருமாள் அடிபாதம் 16–வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் சரவணன் (வயது 37). நில புரோக்கர். இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

நேற்று இரவு 9 மணியளவில் சரவணன், அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் சுரேசுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

அம்பேத்கர் நகர் 9–வது குறுக்கு தெருவில் வந்த போது வீட்டிற்கு செல்வதற்காக வண்டியை நிறுத்தி விட்டு சுரேஷ் இறங்கினார்.

அப்போது 2 மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 4 பேர் கும்பல் திடீரென கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அவர்களை வழிமறித்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரவணனும், சுரேசும் உயிருக்கு பயந்து அலறியபடி ஓட்டம் பிடித்தனர்.

சரவணனை மட்டும் பின் தொடர்ந்த கொலை கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் சரவணனின் தலை, கழுத்து, மார்பில் பலத்த வெட்டு விழுந்தது. சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் சிலர் வீட்டில் இருந்து வெளியே வந்தனர். உடனே மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

கணவர் கொலை செய்யப்பட்டது பற்றி தெரிந்தும் வித்யா கதறியபடி அங்கு வந்தார். அவர் சரவணனின் உடலை பார்த்து அழுதது பரிதாபமாக இருந்தது.

இது குறித்து சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. சேகர், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்–இன்ஸ்பெக்டர்கள் சேது, செல்வராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலைக்கான காரணம்? கொலையாளி யார் என்று தெரியவில்லை. கூலிப்படையினரை ஏவி சரவணனை தீர்த்துக்கட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

கடந்த 2006–ம் ஆண்டு ஊத்துக்கோட்டையில் நடந்த கொலை மற்றும் அம்பேத்கர் நகரில் நடந்த மற்றொரு கொலையில் சரவணன் சம்பந்தப்பட்டு இருந்தார். இது தவிர அவர் மீது 5–க்கும் மேற்பட்ட அடிதடி மோதல் வழக்கும் போலீஸ் நிலையத்தில் உள்ளது.

எனவே இந்த தகராறில் சரவணனை எதிர் தரப்பினர் தீர்த்து கட்டி இருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டு இருக்கிறது.

சரவணன் நில புரோக்கராக இருந்ததால் நிலம் தொடர்பாக யாருடன் பிரச்சினை ஏற்பட்டு உள்ளதா என்பது குறித்த விபரத்தையும் சேகரித்து வருகிறார்கள். இது தொடர்பாக 10–க்கும் மேற்பட்டோரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

குடியிருப்பு பகுதியில் நில புரோக்கர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: வெல்டருடன் ஆசிரியை போலீசில் தஞ்சம்!!
Next post அனந்தி சசீதரனின், அதிரடி அரசியலுக்கு பின்னால் செயற்படும் மர்மக் கரங்கள் எவை? -இனியொரு.. (கட்டுரை)