திருப்பதி கோவிலில் கூடுதல் விலைக்கு லட்டு விற்ற போலீஸ்காரர் கைது!!
Read Time:1 Minute, 10 Second
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் பாக்ராபேட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக இருப்பவர் மோகன் ராவ். இவர் கடந்த 2009–ம் ஆண்டு முதல் 2011 வரை திருப்பதி கோவில் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தார்.
அந்த பழக்க வழக்கத்தை பயன்படுத்தி மோகன்ராவ் நேரம் கிடைக்கும் போதெல்லாம் திருமலைக்கு சென்று லட்டு வாங்கி கூடுதல் விலைக்கு விற்று வந்தார். கடந்த 12–ந்தேதி ரவி என்பவருக்கு 100 லட்டுகளை ரூ.3500க்கு விற்றார். அப்போது ரவியை போலீசார் கைது செய்தனர். போலீஸ்காரர் மோகன்ராவ் தப்பி ஓடி விட்டார். இந்த நிலையில் நேற்று தங்கும் அறையை முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு கொடுக்க வந்த போது போலீஸ்காரர் மோகன்ராவை பிடித்து போலீசார் கைது செய்தனர்.
Average Rating