பெற்ற மகளையே தன் காமப்பசிக்கு இரையாக்கிய மனித மிருகம்!!
பாலியல் வக்கிரம் கொண்டவர்கள் சுதந்திரமாக சுற்றித்திரியும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தான் பெற்ற மகளையே வக்கிர புத்தி கொண்ட ஒரு கொடூர தந்தை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம், மாநிலத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் காசியாபாத் நகரில் உள்ள மனித மிருகம் ஒன்று தனது 10 வயது மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதற்கு ஒப்புக் கொள்ள மறுத்த தன் பிஞ்சு மகளை ஒப்புக் கொள்ளாவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி பல முறை சித்திரவதை செய்துள்ளது.
இந்த நரக வேதனையைப் பொறுக்க முடியாமல் நேற்று அந்த 10 வயது சிறுமி தன் அம்மாவிடம், அப்பாவின் குரூரமான நடவடிக்கைகளை அழுதபடியே சொல்ல, அவர் லோனி கோத்வாலி காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகாரளித்தார்.
போலீசார் அந்த 32 வயதான மனித மிருகத்தைக் கைது செய்துள்ளனர்.
Average Rating