கோவை அருகே புதருக்குள் கிடந்த பெண்ணின் எலும்புக்கூடு!!

Read Time:1 Minute, 41 Second

00603cea-6a60-4637-a5a7-b2a3baecfbf6_S_secvpfகோவையை அடுத்த சரவணம்பட்டி அருகேயுள்ளது குரும்பபாளையம். இங்குள்ள காப்பிக்கடை பஸ் நிறுத்தம் அருகேயுள்ள காட்டுப்பகுதியில் முள்புதருக்குள் மனித எலும்புக்கூடு கிடப்பதாக கோவில்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு கிடந்த எலும்புக்கூடை சேகரித்து சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வுக்கூடத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பினர்.

பரிசோதனையில் அது பெண்ணின் எலும்புக்கூடு என்று தெரியவந்தது. எனவே சரவணம்பட்டியில் பெண்கள் யாராவது காணாமல் போனதாக புகார் பதிவாகி உள்ளதா? என்று விசாரித்தனர்.

அப்போது குரும்பபாளையம் அருகேயுள்ள வழியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நல்லம் மாள்(வயது 90) என்ற பெண் கடந்த சில நாட்களுக்கு முன் மாயமானது தெரியவந்தது.

அவர் அந்தப்பக்கம் சென்ற போது வெயில் கொடுமை காரணமாக இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இருப்பினும் பரிசேதேனை முடிவுகள் வந்த பின்னரே அந்த பெண் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வெயில் கொடுமையால் இறந்தாரா? என்று தெரியவரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேலத்தில் போலீஸ் ஏட்டு மகன் தூக்கு போட்டு தற்கொலை!!
Next post கோவை கமிஷனர் அலுவலகத்தில் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்!!