பேஸ் புக் மூலம் காதல் திருமணம்: வாழ்வை இழந்த இளம்பெண்!!

Read Time:2 Minute, 10 Second

e3db22df-6d0b-46c0-9dca-1ac392ee5b84_S_secvpfதிண்டுக்கல் அருகே உள்ள கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் சித்ரா (வயது 28). நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நாராயணபாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 30). இவர்கள் 2 பேரும் பேஸ் புக் மூலம் நண்பர்கள் ஆனார்கள்.

நாளடைவில் அவர்களின் நட்பு காதலாக மாறியது. திருமணமான பழனிச்சாமி அதனை மறைத்து பழகினார். இதனை அறியாத சித்ரா அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.

பெற்றோர் சம்மதம் தெரிவித்ததையடுத்து சித்ரா பழனிச்சாமியை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் வரப்பாளையத்தில் குடித்தனம் நடத்தி வந்தனர். இந்நிலையில் பழனிச்சாமி வாரந்தோறும் பெற்றோரை பார்த்து வருவதாக கூறி வெளியே சென்றார்.

மேலும் சொந்த ஊருக்கு அழைத்து செல்லாமல் வரப்பாளையத்தில் வாடகை வீட்டில் குடியமர்த்தியதால் சித்ராவுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் கணவரின் சொந்த ஊரான நாராயணபாளையம் சென்று விசாரித்தார். அப்போது அவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது. இதனையறிந்து அதிர்ச்சியடைந்தார். இதனால் கணவன் மனைவியிடையே பிரச்சினை வெடித்தது. மேலும் மனைவியின் நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு பழனிச்சாமி தலைமறைவானார்.

இதையடுத்து சித்ரா திண்டுக்கல் ஜே.எம். 2–வது கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் திண்டுக்கல் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுவையில் என்ஜினீயரிங் மாணவர் கற்பழித்ததால் குழந்தை பெற்ற 10–ம் வகுப்பு மாணவி!!
Next post கடும் போராட்டத்துக்கு பின்னர் 9 குழந்தைகள் பெற்ற பெண்ணுக்கு குடும்பக்கட்டுப்பாடு!!