கொல்கத்தாவில் 71 வயது கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்ட வழக்கு: முக்கிய குற்றவாளி கைது!!

Read Time:1 Minute, 30 Second

583884e9-96b3-4836-be73-907f824dd8c5_S_secvpfநாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தில், 71 வயதான மூத்த கன்னியாஸ்திரி, 4 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 6 பேரை கைது செய்தனர். இருப்பினும் இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி போலீசில் சிக்காமல் தண்ணி காட்டி வந்தான்.

இந்நிலையில் வங்கதேசத்தை சேர்ந்த 28 வயதான நஸ்ருல் அகா நசூ என்ற அவன், நேற்று மாலை சியால்டா ரெயில் நிலையத்தில் ரெயிலில் இருந்து கீழே இறங்கியபோது கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி சித்தரஞ்சன் நாக் உறுதி செய்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூர்தர்சனின் பிரசார் பாரதி குழுவில் நடிகை கஜோல்: மத்திய அரசு சிபாரிசு!!
Next post பாலக்காடு அருகே கோவை பெண் மர்மச்சாவு: கள்ளக்காதலன் கைது!!