கோவை அரசு ஆஸ்பத்திரி முன்பு ஆண் குழந்தையை பையில் போட்டு வீசிசென்ற கொடூர தாய்!!
கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். நேற்று இரவு 11.30 மணியளவில் அரசு ஆஸ்பத்திரி முன்பு சென்ற போது அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தின் முன்பு ஒரு துணிப்பை கிடந்தது.
சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பையை பிரித்து பார்த்தனர். அப்போது ஒரு குழந்தை அவர்களை பார்த்து சிரித்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் இது குறித்து ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் ஜோசுக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து அவரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். பின்னர் அருகில் இருந்தவர்களிடம் இந்த குழந்தையை அனாதையாக யார் வீசி சென்றார்கள் என்று விசாரணை நடத்தினர். ஆனால் யாரும் தெரியவில்லை என்றனர்.
பின்னர் போலீசார் குழந்தையை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர். அங்கு குழந்தைகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். வளர்க்க முடியாமல் குழந்தையை தாயே வீசி சென்றாரா? அல்லது வேறு யாராவது வீசி சென்றார்களா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating