திருவாடானை அருகே பெண் குத்திக்கொலை: மருமகனுக்கு வலைவீச்சு!!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஆதியூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி காளியம்மாள் (வயது50). 2 மகன்கள் உள்ளனர்.
இதில் ஒரு மகளான ராமு என்பவரை திருவாடானை அருகே உள்ள கவ்வூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் பாலமுருகன் (27) என்பவருக்கு கடந்த ஆண்டு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு 6 நாட்களுக்கு முன்புதான் குழந்தை பிறந்தது.
பாலமுருகன் சென்னையில் வேலை பார்த்து வந்தார். மாமியார் காளியம்மாளிடம், பாலமுருகன் தொழில் செய்வதற்காக அடிக்கடி பணம் கேட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று இரவும் ரூ.2 லட்சம் பணம் கேட்டு மாமியாரை நச்சரித்தார். இதற்கு காளியம்மாள் அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என்று கூறவே இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த பாலமுருகன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியார் காளியம்மாளை சரமாரியாக குத்திவிட்டு ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த காளியம்மாள் சம்பவ இடத்திலேயே பிணமானார்.
இது குறித்து திருவாடானை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கதிர்வேல் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பாலமுருகனை தேடி வருகிறார்.
Average Rating