ராமநாதபுரம் அருகே தொண்டைக்குள் மீன் சிக்கியதில் வாலிபர் சாவு!!

Read Time:1 Minute, 17 Second

91617e2b-b87a-4350-84eb-86005636e0e2_S_secvpfராமநாதபுரம் அருகே உள்ள வட்டான்வலசையை சேர்ந்தவர் காந்தி (வயது 40). மீனவர். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.

நேற்று காந்தி வைகை ஆறு கடலில் சேரும் ஆற்றாங்கரை பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தார். இதில் நிறைய மீன்கள் சிக்கின.

இதையடுத்து வலையை வெளியே எடுத்து அதிலிருந்த மீன்களை சேகரித்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு மீன் வலையில் இருந்து துள்ளிக்குதித்த படி எதிர்பாராத விதமாக காந்தியின் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது. இதில் அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த உச்சிப்புளி போலீசார் விரைந்து வந்து காந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொடுங்கையூரில் கணவர் கண் எதிரே மனைவி தீக்குளித்து சாவு: ஆர்.டி.ஓ. விசாரணை!!
Next post கோவை துடியலூரில் கல்லூரி மாணவியை காதலித்து கர்ப்பிணியாக்கிய 2 பெண்டாட்டிக்காரர் கைது!!