வில்லிவாக்கத்தில் வக்கீல் கார் கண்ணாடியை உடைத்து ரூ.4 லட்சம் கொள்ளை!!
வில்லிவாக்கம் ஐகோர்ட்டு காலனியை சேர்ந்தவர் உமைதி போர்த்தி (42).
சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வரும் உமைதிபோர்த்தி, நேற்று மதியம் அண்ணாநகர் சென்றார். அங்குள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.4 லட்சம் எடுத்தார்.
பணப்பையை காரின் பின் சீட்டில் வைத்தார். பின்னர் கார் கதவை பூட்டிவிட்டு அருகில் உள்ள ஓட்டலில் சென்று சாப்பிட்டார்.
திரும்பி வந்த போது காரின் பின்புற கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கதவை திறந்து பார்த்த போது பின் சீட்டில் அவர் வைத்து விட்டுச்சென்றிருந்த 4 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அவர் வங்கியில் பணம் எடுத்ததை நோட்டமிட்ட யாரோ காரை நிறுத்திவிட்டு ஓட்டலுக்குள் சென்றதை தெரிந்து கொண்டு பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து, அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating