திருமணமான 4 மாதத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: கணவர், மாமனார்–மாமியார் கைது!!
செங்கல்பட்டை அடுத்த ராமாபாளையம், காட்டு நாயக்கன் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மகன் முத்து தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் கூடுவாஞ்சேரியை சேர்ந்த புவனேஸ்வரிக்கும் கடந்த 4 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு புவனேஸ்வரியை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதில் மனவேதனை அடைந்த புவனேஸ்வரி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது தந்தை மோகன் செங்கல்பட்டு டவுன் போலீசில் புகார் செய்தார். அதில் எனது மகளை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து புவனேஸ்வரியின் கணவர் முத்து, மாமனார் மணி, மாமியார் காட்டம்மாள் ஆகியோரை கைது செய்தார். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating