ஓராண்டுக்கு முன்னர் ஊரை விட்டு ஓடிய காதலர்கள் பஞ்சாப் பொற்கோயில் வளாகத்தில் இன்று விஷம் குடித்து தற்கொலை!!
1பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டாலா நகரை சேர்ந்தவர் அம்ரிட்பால் சிங்(30). அதே பகுதியில் வசித்துவந்த கிரன்தீப் கவுர்(20) என்ற பெண்ணை இவர் உயிருக்குயிராக காதலித்து வந்துள்ளார்.
இந்த காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஓராண்டுக்கு முன்னர் இந்த காதலர்கள் வீட்டைவிட்டு வெளியேறி எங்கோ சென்று விட்டனர். இதுதொடர்பாக, இரு குடும்பத்தாரும் உள்ளூர் போலீசில் புகார் அளித்திருந்தனர். போலீசார் அவர்களை தேடிவந்த நிலையில் பஞ்சாப் மாநில தலைநகர் அமிர்தசரசில் உள்ள பொற்கோயில் வளாகத்தில் ஒரு ஆணும், பெண்ணும் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக இன்று மாலை போலீசாருக்கு தகவல் வந்தது.
விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்த அமிர்தசரஸ் நகர போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட அந்த ஜோடி, குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டாலா நகரை சேர்ந்த அம்ரிட்பால் சிங் மற்றும் கிரன்தீப் கவுர் என்பது தெரியவந்துள்ளது.
Average Rating