ஜார்க்கண்டில் கடத்தப்பட்ட வங்கி கேஷியர் காட்டில் பிணமாக மீட்பு!!
Read Time:1 Minute, 26 Second
ஜார்க்கண்ட் மாநிலத்தின் கார்வா மாவட்டத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட வங்கி கேஷியரின் பிணம் இன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கார்வா மாவட்டத்தில் உள்ள டாட்டிதிரி பகுதியில் இயங்கிவரும் வனாஞ்சல் வங்கியில் கேஷியராக பணியாற்றி வந்த ஜைனீல் பாண்டே என்பவர் கடந்த 9-ம் தேதி அடையாளம் தெரியாத சில நபர்களால் கடத்தப்பட்டார்.
இந்த ஆள்கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தேடிவந்த போலீசார், இரு நபர்களை கைது செய்து விசாரித்தபோது ஜைனீஸ் பாண்டேவை சுட்டுக் கொன்றுவிட்டு பிணத்தை பலமாவ் மாவட்டத்தில் உள்ள சல்ட்வா காட்டுப்பகுதியில் தூக்கி எறிந்து விட்டதாக வாக்குமூலம் அளித்தனர்.
இதையடுத்து, அந்த காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், வங்கி கேஷியர் ஜைனீஸ் பாண்டேவின் பிரேதம் இன்று மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
Average Rating