காதலுக்கு எதிர்ப்பு?: ரெயிலின் முன் பாய்ந்த பெண் பலி- படுகாயத்துடன் வாலிபர் உயிர் ஊசலாட்டம்!!

Read Time:1 Minute, 20 Second

e928b5d0-dc23-4ef0-ba65-8258852b4849_S_secvpfஉத்தரப்பிரதேசத்தின் எடாவா மாவட்டத்தில் காதல் ஆசை கைகூடாததால் இன்று ரெயிலின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற ஜோடியில் இளம்பெண் பரிதாபமாக பலியானார்.

எடாவா மாவட்டத்தில் உள்ள பஞ்சாப் காலனி பகுதியில் உள்ள எடாவா-கான்பூர் இடையிலான தண்டவாளத்தின் மீது வேகமாக வந்த ரெயிலின் முன் இன்று பிற்பகல் இந்த காதலர்கள் பாய்ந்தனர். ரெயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.

படுகாயங்களுடன் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள ரெயில்வே போலீசார், இந்த பரிதாப முடிவை தேர்ந்தெடுத்த இந்த ஜோடி எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை என கூறியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜார்க்கண்டில் கடத்தப்பட்ட வங்கி கேஷியர் காட்டில் பிணமாக மீட்பு!!
Next post தலைகளுக்கு ரூ. 14 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல் தம்பதியர் போலீசில் சரண்!!