தலைகளுக்கு ரூ. 14 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல் தம்பதியர் போலீசில் சரண்!!
Read Time:1 Minute, 9 Second
மராட்டிய மாநிலத்தில் தேடப்படும் குற்றவாளிகளாக தலைகளுக்கு 14 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த நக்சலைட் தம்பதியர் இன்று போலீசாரிடம் சரண் அடைந்தனர்.
போலீசாரை என்கவுன்டரில் கொன்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பச்கோன் டலாம் பகுதியின் நக்சலைட் தளபதியாக செயல்பட்டு, தலைமறைவாக இருந்துவந்த விஜய் (எ) தனிராம் டுகா(26) என்பவனின் தலைக்கு 12 லட்சம் ரூபாயும், அவனது மனைவியான பெண் நக்சலைட் ராதா (எ) வசந்தி கோவா(23) என்பவரின் தலைக்கு பரிசாக 2 லட்சம் ரூபாயும் பரிசாக அறிவித்திருந்த மராட்டிய மாநில போலீசார், இந்த தம்பதியரை சில மாதங்களாக வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில், நாக்பூர் மாவட்ட போலீசாரிடம் இன்று இந்த தம்பதியர் சரண் அடைந்தனர்.
Average Rating