திருமண வீட்டில் கொண்டாட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு வாலிபர் பலி!!
Read Time:58 Second
அரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள சவுபால் கிராமத்தில் நேற்றிரவு நடைபெற்ற திருமண விழாவின்போது உற்சாகம் மிகுதியால் ஒருவர் தனது கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சரமாரியாக சுட்டார்.
துப்பாக்கியில் இருந்து வரிசையாக சிறிப்பாய்ந்த தோட்டாக்களில் ஒன்று பலக் கிராமத்தைச் சேர்ந்த குல்தீப்(25) என்பவர் உடலை துளைத்துச் சென்றது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய ஜோகிந்தர் என்பவரை கைது செய்துள்ளனர்.
Average Rating