முதலாளி உட்பட 3 பணியாளர்கள் மீது பாலியல் புகாரளித்த பெண்!!
Read Time:1 Minute, 18 Second
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், தான் பணிபுரியும் நிறுவனத்தின் முதலாளி உட்பட 3 சக பணியாளர்கள் மீது பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் கொல்கத்தாவில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
தெற்கு கொல்கத்தாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 34 வயதான அந்தப் பெண் செட்லா காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், தனது நிறுவனத்தின் முதலாளி மற்றும் தன்னுடன் பணியாற்றிய 3 பேரும், தன்னிடம் ஆபாசமாக பேசியதாகவும், தன்னுடைய ஒழுக்கத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் விதமாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறிய அவர் அளித்த புகாரை பதிவு செய்த போலீசார், அந்நிறுவனத்தின் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating