மெட்ரோ ரெயிலுக்குள் சிறுநீர் கழித்த நபர்: வீடியோ வெளியானதால் சமூக வலைதளங்களில் பரபரப்பு!!
டெல்லியில் மெட்ரோ ரெயிலுக்குள் பயணி ஒருவர் சிறுநீர் கழித்துள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அநாகரீகமான காட்சியை தனது செல்போனில் படம்பிடித்த நபர், அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பயணி சிறுநீர் கழித்துக் கொண்டிருந்ததை பல பயணிகள் தனக்கேன் வம்பு என்று கண்டு கொள்ளாத நிலையில் இந்த வீடியோவை எடுத்த நபர் அந்த பயணியிடம் ’ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள்?’ என்று கேட்க அதிர்ச்சியடைந்த அந்த பயணியோ ”இதுதான் எனக்கு கடைசி ரெயில். இதை விட்டுவிடக் கூடாது என்றுதான் சிறுநீரை அடக்கிக் கொண்டு இதில் ஏறினேன்.’ என்று காரணம் கூறியுள்ளார்.
இந்த அநாகரீக சம்பவம் குறித்து ரெயில்வே ஹெல்ப் லைனில் புகாரளித்தும் இதுவரை எந்த வித பதிலும் இல்லையென்று வீடியோ எடுத்த நபர் கவலை தெரிவித்துள்ளார்.
Average Rating