கோவையில் இரட்டை ஆண் குழந்தை பெற்ற வங்கி அதிகாரி சாவு!!
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர் மணிக்குமார். சாப்ட்வேர் என்ஜினீயர். இவரது மனைவி லட்சுமி சுதா (வயது 29). இவர் சென்னையில் உள்ள தனியார் வங்கியில் உதவி மானேஜராக இருந்தார்.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான லட்சுமி சுதா பிரசவத்துக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது.
பிரசவம் முடிந்த பின்னர் லட்சுமி சுதாவுக்கு வயிறு உப்பி பெரிதாக இருந்தது. இது குறித்து அங்குள்ள டாக்டர்களிடம் கூறியபோது சிகிச்சை அளித்தனர். எனினும் லட்சுமி சுதாக்கு குணமாகவில்லை.
இதனையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகம் வேறொரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர பரிந்துரைத்தது.
உடனடியாக லட்சுமி சுதா மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி சுதா இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இதை அறிந்த லட்சுமி சுதா உறவினர்கள் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சை அளித்ததாலும், டாக்டர்களின் அலட்சியத்தாலும் லட்சுமி சுதா இறந்து விட்டதாக முதலில் அனுமதிக்கப்பட்ட ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். தகவல் அறிந்ததும் காட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் லட்சுமி சுதாவின் உறவினர்கள் இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating