ஈரோடு பஸ் நிலையத்தில் குழந்தைகள் கடத்தல் கும்பல் நடமாட்டமா? போலீசார் தீவிர கண்காணிப்பு!!

Read Time:3 Minute, 4 Second

d4569f25-9e50-46b0-9d33-81ca344bedcd_S_secvpfதமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு சிறுவர் – சிறுமிகள் கடத்தப்படுவதாகவும் இவர்கள் திருச்சூரில் ஏலம் விடப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாகவும் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் பல்வேறு இடங்களில் குழந்தைகள் கடத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தநிலையில் ஈரோடு பஸ் நிலையத்தில் சில நாட்களுக்கு முன் மதியம் ரவி–லட்சுமி என்ற பார்வையற்ற தம்பதிகளின் 1 ½ வயது பெண் குழந்தை யோக ஸ்ரீயை ஒரு வாலிபர் கடத்தி செல்ல முயன்றார்.

போலீசார் மற்றும் பொதுமக்கள் விரட்டி சென்றதால் அந்த வாலிபர் குழந்தையை கீழே இறக்கி விட்டு தப்பி ஓடி விட்டார்.

குழந்தையை கடத்த முயன்ற அந்த வாலிபர் யார்? இவர் ஏன் குழந்தையை கடத்த முயன்றார்? இவர் ஏற்கனவே குழந்தை கடத்தலில் ஈடுபட்டு உள்ளாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்,.

இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை யோகஸ்ரீயை கடத்த முயன்ற வாலிபரை தேடி வருகிறார்கள் இன்னும் அவர் சிக்கவில்லை..

ஈரோடு பஸ் நிலையத்தில் வழக்கமாக மதுபோதையில் விழுந்து மயங்கி கிடப்பவர்களிடம் பணம் பறிக்கும் சம்பவம் தான் அடிக்கடி நடந்து வருகிறது.

இந்த நிலையில் குழந்தையை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எனவே ஈரோடு பஸ் நிலையத்தில் குழந்தை கடத்தும் கும்பல் நடமாடு கிறதோ? என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டு உள்ளது.

இதையொட்டி ஈரோடு பஸ் நிலையத்தில் போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டு குழந்தைகளை கடத்தும் கும்பல் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது ‘‘குழந்தையை கடத்த முயன்றதாக கூறப்படும் வாலிபரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பஸ் நிலையத்திலோ மற்றும் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களிலோ தங்களது குழந்தைகளை யார் பொறுப்பிலும் விடாமல் பெற்றோர்கள் பாதுகாத்து கொள்ள வேண்டும், பஸ்களில் குழந்தைகளை தனியாக விட்டு விட்டு வேறு எங்கும் பெற்றோர்கள் செல்ல வேண்டாம்’’ என்று கூறினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவையில் இரட்டை ஆண் குழந்தை பெற்ற வங்கி அதிகாரி சாவு!!
Next post பழையவண்ணாரப்பேட்டையில் தூங்கிய பெண்ணிடம் தாலி சங்கிலி கொள்ளை!!