நுங்கம்பாக்கத்தில் கல்லூரி மாணவரிடம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள காமிரா திருட்டு!!
Read Time:1 Minute, 6 Second
சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் ஜோசப் (21). இவர் நுங்கம்பாக்த்தில் உள்ள ஒரு கல்லூரியில் விஸ்காம் படித்து வருகிறார். இவர் படிப்பதற்காக வெளி நாட்டில் உள்ள அவரது சித்தப்பா ரூ.2 லட்சம் மதிப்புள்ள காமிரா வாங்கி கொடுத்தார்.
இந்த நிலையில் நேற்று தேர்வு நடந்தது. அதற்காக கல்லூரி சென்ற ஜோசப் காமிராவை வெளியில் வைத்து விட்டு தேர்வு எழுத ஹாலுக்குள் சென்றார்.
அப்போது யாரோ அவரது காமிராவை திருடி சென்று விட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். காமிரா திருடப்பட்ட காட்சி கல்லூரியில் உள்ள சி.சி.டி.வி காமிராவில் பதிவாகியுள்ளது. அதை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Average Rating