நடிகை மீது அவதூறு வழக்கு!!
Read Time:1 Minute, 18 Second
உண்மையை சொன்னதற்காக நடிகை சார்மி மீது வழக்கு தொடரப்போவதாக கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் ஒருவர்.
சார்மி நடித்த ஜோதிலட்சுமி திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பூரி ஜெகன்நாத் இயக்கிய இந்தப் படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்தவர் நடிகரும், தயாரிப்பாளருமான நிதின்.
அவர் திடீரென்று படத்திலிருந்து விலக, சார்மி இணை தயாரிப்பாளரானார். நிதின் பணப்பற்றாக்குறை காரணமாக படத்திலிருந்து விலகியதாக சார்மி ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.
இது நிதினுக்கும் அவரது தந்தை தயாரிப்பாளர் சுதாகர் ரெட்டிக்கும் அவமானமாகப் போய்விட்டதாம். சார்மி மீது அவதூறு வழக்கு தொடருவேன் என்று குறித்துக் கொண்டிருக்கிறார்கள் இருவரும்.
உண்மையை சொன்னதற்கு எல்லாமா வழக்குப் போடுவார்கள்?
Average Rating