வரதட்சணை கொடுமையின் உச்சகட்டம்: மருமகளுக்கு ஆசிட் கொடுத்து கொன்ற மாமியார் உள்பட 8 பேருக்கு வலைவீச்சு!!
Read Time:1 Minute, 7 Second
அரியானாவின் பரிதாபாத் நகரில் வரதட்சணைக் கொடுமை செய்து மருமகளை கொன்ற மாமியார், கணவன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
23 வயதான அந்த இளம்பெண் ஆஷா, கணவன் வீட்டிற்கு வந்த நாள் முதல் வரதட்சணை கொடுமையை அனுபவித்து வந்துள்ளதாகவும், சம்பவத்தனறு அவரது மாமியாரும் குடும்பத்தில் உள்ளவர்களும் சேர்ந்து கட்டாயப்படுத்தி ஆசிட்டை குடிக்க வைத்து கொலை செய்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஷாவின் மாமியார் 10 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து ஆஷாவின் கணவர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவர்களைத் தேடி வருகின்றனர்.
Average Rating