விதவையை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்!!
Read Time:1 Minute, 16 Second
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பிர்பம் மாவட்டத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த விதவைப் பெண்ணை, 8 கொடூரர்கள் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தத்தினபரா கிராமத்தை சேர்ந்த 36 வயதான விதவைப் பெண் ஒருவர், கடந்த வெள்ளியன்று உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக சென்றிருந்தார். திருமண நிகழ்ச்சி முடிந்து மண்டபத்தை விட்டு வெளியே வந்த போது, அங்கிருந்த 8 கொடூரர்கள், அவரை மறைவான இடத்திற்கு கொண்டு சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட அந்த பெண் நேற்று போலீசில் புகாரளித்ததையடுத்து, பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Average Rating