இனி ஆண்கள் ஸ்கர்ட்டும், பெண்கள் பேண்டும் அணியலாம்!!
Read Time:1 Minute, 21 Second
உடை தொடர்பான கேம்பிரிட்ஜ் கல்லூரியின் 800 ஆண்டு பாரம்பரியத்தில் மாற்றம் செய்யப்படுள்ளது. இனி ஆண்கள் ஸ்கர்ட்டும் , பெண்கள் பேண்டும் அணிய அனுமதிக்கப்பட்டுள்ளது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த செயின்ட் கேத்தரின் கல்லூரி 1473-ல் உருவாக்கப்பட்டது. இங்கு ஆண்கள் நாகரிகமான பேண்ட் சட்டையும், பெண்கள் பாவடை, ஸ்கர்ட் போன்றவையும் அணிய வேண்டும் என்பது விதி. ஆனால் இங்கு படிக்கும் திருநங்கை ஒருவர் போராட்டம் மேற்கொண்டதை அடுத்து 800 ஆண்டு பாரம்பரியத்தில் மாற்றம் செய்துள்ளது கேம்பிரிட்ஜ் கல்லூரி.
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதியின் படி இனி ஆண்கள் ஸ்கர்ட்டும், பெண்கள் பேண்டும் அணியலாம். அதேபோல் தங்களை ஆண் என்றோ அல்லது பெண் என்றோ வகைப்படுத்தாதவர்கள் அவர்கள் விருப்பபடி ஆண்கள் உடையோ பெண்கள் உடையோ அணியாலாம் என தெரிவிக்கப்படுள்ளது.
Average Rating