கழுத்தை அறுத்து 10 வயது சிறுமி கொடூர கொலை

Read Time:2 Minute, 54 Second

tamil_21.jpgபுதுக்கோட்டை அருகே கழுத்தை அறுத்து 10 வயது சிறுமியை கொன்ற மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையைச் சேர்ந்தவர் உதயக்குமார். இவரது மனைவி கவுசல்யா. இவர்கள் புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் வேலை செய்கின்றனர். இவர்களது ஒரே மகள் தரங்கிணி (10). இதே பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தாள். மழையால் பள்ளிக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டதால், தரங்கிணியை வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு சென்றனர். வீட்டில் உதயகுமாரின் தந்தை முத்தையா, தாய் அங்கம்மாள் ஆகியோர் இருந்தனர். மதியம் 1 மணிக்கு அங்கம்மாள் ஆடு மேய்க்க சென்று விட்டார். முத்தையாவும் வெளியே சென்றுவிட்டார். தரங்கிணி மட்டும் வீட்டில் இருந்தார். வீட்டுக்கு வந்தார். அப்போது வீடு வெளிபக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் திண்ணையில் படுத்துக்கொண்டார். அங்கம்மாள் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்தார். அப்போதும் சிறுமி வராததால் அவரும் வெளியிலேயே காத்திருந்தார்.

உதயகுமாரும், கவுசல்யாவும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது, ஏன் வெளியே இருக்கிறீர்கள் என்று கேட்டார். வீடு பூட்டிகிடப்பதாக கூறினார்கள். அதன்பிறகு பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் தரங்கிணி கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். சிறுமியின் முகம் முழுவதும் அரிவாளால் கொத்தி சிதைக்கப்பட்டிருந்தது.

இதுபற்றி ஆதனக்கோட்டை போலீசில் புகார் செய்தனர். இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர். வீட்டில் எந்த பொருளும் திருட்டு போகவில்லை. பாலியல் பலாத்காரமும் நடைபெறவில்லை. எனவே முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் அந்த பகுதியை சேர்ந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சிரியா மீதான இஸ்ரேலின் விமானத் தாக்குதல் புகைப்படங்களை வெளியிட்டது அமெரிக்கா
Next post அணுசக்தியில் தன்னிறைவு பெறுவதே இறுதி இலட்சியம் என்கிறார் கலாம்