கே.ஜி.எப்.-ல் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் ரூ.36 லட்சம் பணம், நகை திருட்டு!!

Read Time:1 Minute, 15 Second

47072e0c-eb63-4088-9282-427e83a1edde_S_secvpfகர்நாடக மாநிலம் கே.ஜி.எப். ராபர்ட்சன் பேட்டை காந்தி சதுக்கத்தில் பிரகாஷ் என்பவர் வீடு உள்ளது. இவர் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.

குடும்பத்துடன் நேற்று முன்தினம் சென்னைக்கு சென்றார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டில் நுழைந்து அங்கு பீரோவில் இருந்த ரூ. 34 லட்சம் பணம், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி சென்றனர்.

நேற்று காலை பிரகாஷ் குடும்பத்தினர் வீடு திரும்பியபோது திருட்டு நடந்தது தெரிய வந்தது. இது குறித்து ராபர்ட்சன் பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

மோப்ப நாய் மூலம் துப்பு துலக்கப்பட்டது. தடவியல் நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர். சப்–இன்ஸ்பெக்டர் ஜகதீஷ் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு திருட்டு கும்பலை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யோகாவை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு போய் விடலாம்: சர்ச்சையை கிளப்பும் சாத்வி பிராச்சி!!
Next post கொலை குற்றவாளிக்கு அப்பீலில் ஆப்பு வைத்த ஐகோர்ட் நீதிபதிகள்: இரட்டை ஆயுளை மூன்று ஆயுள் தண்டனையாக்கி உத்தரவு!!