கனவுக்கல்வியான ஐ.ஐ.டி.க்கு தேர்வான ஏழை சகோதரர்கள் மீது தாக்குதல்!!
வாழ்வில் முன்னேறத் துடிக்கும் பல மாணவர்களின் கனவுக்கல்வியான ஐ.ஐ.டி.க்கு தேர்வு செய்யப்பட்ட ஏழை மாணவர்களைக் குறிவைத்து மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஏழை சகோதரர்கள் ராஜூ(18) மற்றும் பிரிஜேஸ்(19). இவர்களது அப்பா தினக்கூலியாக வேலை செய்து வரும் நிலையில், படிப்பு மட்டுமே தங்கள் ஏழ்மையை மாற்றும் என்பதை புரிந்து கொண்டு வெறித்தனமாக படித்தனர். பல்வேறு தடைகளைத் தாண்டி நகர்ப்புற மாணவர்களே பதிலளிக்க திணறும் ஐ.ஐ.டி., நுழைவு தேர்வில் வெற்றி பெற்றனர். இருப்பினும், ஐ.ஐ.டி.யில் சேர பணமில்லாமல் இவர்கள் தவித்து வந்த நிலையில், அண்மையில் இந்த சகோதரர்களின் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உத்தரவிட்டார்.
இந்நிலையில், மாணவர்களின் முன்னேற்றத்தை பொறுத்துக்கொள்ள முடியாத சில மர்ம நபர்கள் நேற்று, அவர்கள் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் வீட்டின் முன் முகாமிட்டுள்ள காவல்துறையினர் அவர்களுக்கு பாதுகாப்பளித்து வருகின்றனர்.
Average Rating