பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆபாச படங்கள் விற்பனை: செல்போன் கடை ஊழியர்கள் கைது!!
திருப்பூரில் உள்ள செல்போன் கடைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு செல்போன்களில் ஆபாச படங்கள் சப்ளை செய்யப்படுவதாக திருப்பூர் மாநகர கமிஷனர் சேஷசாய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் போலீஸ் உதவி கமிஷனர் திருநாவுக்கரசு திருப்பூர் முழுவதும் மொபைல் கடைகளில் அதிரடியாக சோதனை நடத்த உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் அங்கேரிபாளையம் பகுதியில் உள்ள மொபைல் கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது அந்தக் கடையில் ஆபாச படங்கள் இன்டர்நெட்டிலிருந்து பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு விற்பனை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பென் டிரைவ் மூலம் ஆபாச படங்களை போட்டு ரூ.20–க்கு விற்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கடையில் பணியாற்றி வந்த சிவராஜ்(36), சிவகுமார்(36), ஜீத்(25) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ. 35 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 பென் டிரைவ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து திருப்பூர் முழுவதும் உள்ள செல்போன் கடைகளில் அதிரடி சோதனை நடந்து வருகிறது.
Average Rating