மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!!
உத்தரபிரதேச மாநிலம் நகலா சத்தராபன் என்ற இடத்தில் கடந்த மே 25-ந்தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் ஒருவர் தனது செல்போனில் இருந்து போலீசார் மற்றும் ஊடகங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மர்ம நபர் நவாலி கிராமத்தை சேர்ந்த ரம்வீர் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று முன்தினம் போலீஸ் நிலையத்துக்கு அருகே சாலையோரம் விழுந்து கிடந்த ரம்வீரை போலீசார் கைது செய்தனர். ரம்வீர் கைது செய்யப்பட்டபோது மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்து அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
ரம்வீர் போதை பழக்கத்துக்கு அடிமையானவர் என்பதால் மர்ம நபர் யாரேனும் அவரது செல்போனில் இருந்து கொலை மிரட்டல் விடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனினும் ரம்வீரின் சகோதரர் லக்ஷ்மன் சிங் என்பவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating