நூடுல்ஸ் மீதான நடவடிக்கையை தொடர்ந்து மதுபானத்துக்கு தர நிர்ணயம் செய்ய முடிவு!!
Read Time:1 Minute, 15 Second
உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கும் நூடுல்ஸ் மீதான நடவடிக்கையை தொடர்ந்து, மதுபானங்களுக்கு தர நிர்ணயம் செய்ய இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் முடிவு செய்துள்ளது. விஸ்கி, வோட்கா, ஜின், பீர் உள்பட ஒவ்வொரு மதுவகையிலும் எந்த அளவுக்கு தரம் இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கும் பணி நடந்து வருகிறது.
ஒவ்வொரு மதுவகையிலும் தர நிர்ணயம் பற்றிய வரைவு அறிவிக்கை, இன்னும் 2 மாதங்களில் வெளியிடப்பட உள்ளது. அதுபற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும். பின்னர், தர நிர்ணயம் இறுதி செய்யப்பட்டு, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் தெரிவிக்கப்படும். அதன் அடிப்படையில், மதுபானங்களின் தரம் மேம்படுத்தப்பட வாய்ப்பு ஏற்படும் என்று உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணைய அதிகாரி ஒருவர் கூறினார்.
Average Rating