பக்ரைன் நாட்டில் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம்
Read Time:1 Minute, 17 Second
பக்ரைன் நாட்டில் வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு குறைந்தது 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் தரவேண்டும் என்று அந்த நாட்டுக்கான இந்திய தூதர் பாலகிருஷண ஷெட்டி கேட்டுக்கொண்டு இருக்கிறார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்திய தொழிலாளர்களுக்கான புதிய சம்பள விகிதத்தை இந்திய தூதரகம் இந்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. அதன்படி வீட்டு வேலை செய்யும் இந்திய பெண்களுக்கு குறைந்தது 10 ஆயிரம் ரூபாய் தரவேண்டும். அதோடு வேலை கொடுப்பவர் தன் செலவில் ஒரு மொபைலும் வழங்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார். யாராவது வீட்டு வேலைக்கு இந்திய பெண்களை வேலைக்கு சேர்த்துக்கொள்ள விரும்பினால், அவர்கள் இந்திய தூதரகத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.