8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர்!!
ஆந்திர பிரதேச மாநிலத்தில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஆட்டோ டிரைவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நேற்று பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஆட்டோ டிரைவர் மாணவியை தனது ஆட்டோவில் ஏறிக் கொள்ளுமாறு வற்புறுத்தினார். முதலில் தயங்கி நின்ற மாணவி, அவரது தொடர் வற்புறுத்தலால் ஆட்டோவில் ஏறிக்கொண்டார்.
மாணவியை பள்ளிக்கு கொண்டு செல்லாமல் ஒதுக்குப்புறமான பகுதிக்கு கொண்டு சென்ற வக்கிர புத்தி கொண்ட அந்த ஆட்டோ டிரைவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு நேர்ந்த கொடூரத்தை பெற்றோரிடம் கூறியதையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பாஸ்கர ராவை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Average Rating