தாறுமாறாக ஓடிய கார்: 6 பேர் படுகாயம்- வாலிபரை விரட்டி பிடித்து தர்மஅடி!!
கோவையில் இருந்து சாலையிலிருந்து சத்தியமங்கலம் நோக்கி ஒரு கார் நேற்று இரவு ரோட்டில் தாறுமாறாக வந்தது.
இந்த கார் எஸ்ஆர் டி.கார்னர், பஸ்நிலையம், ஆற்றுப்பாலம், பழைய மார்கெட், கோட்டு வீராம்பாளையம் மற்றும் கோம்புபள்ளம் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மீதும் நடந்து சென்றவர்கள் மீதும் மோதியபடி நிற்காமல் சென்றது.
இதில் சத்தியமங்கலத்தை சேர்ந்த இளங்கோ(26), கோட்டமாளத்தை சேர்ந்த ரங்கசாமி(27), கோட்டுவீராம்பாளையம் பாலமுருகன்(48), ஓய்வு பெற்ற போலீஸ் காவலர் வரதராஜ்(61) உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.. இவர்கள் அனைவரும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். பலத்த காயம் பட்ட இளங்கோவை மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் தாறுமாறாக ஓடிய காரை பொதுமக்கள் பைக்கில் துரத்தி சென்று பண்ணாரி சாலையில் ஆர்.டி..ஓ ஆபீஸ் அருகே மடக்கிபிடித்தனர்.
பொதுமக்கள் காரை சுற்றி வளைத்ததை கண்ட காரில் இருந்த இருவரும் காரிலிருந்து இறங்கி தப்பியோடினர். இதனால் பொதுமக்கள் சுதாரித்து இருவரையும் துரத்தியதில் ஒருவன் மட்டும் சிக்கினான். மற்றொருவன் தப்பியோடிவிட்டான்.
பொதுமக்களிடம் சிக்கிய வாலிபருக்கு சிலர் தர்மஅடி கொடுத்தனர்.
இதுபற்றி தகவலறிந்த சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் சிக்கிய வாலிபரை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அந்த வாலிபர் ஊத்தங்கரையை சேர்ந்த திருவேங்கடம் என்பது தெரியவந்தது. பின்னர் அந்த வாலிபரை போலீசார் 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய மற்றொரு வாலிபரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
Average Rating