கள்ளக்காதலியை கொன்று வாய்க்காலில் பிணம் வீச்சு: கோபி வாலிபருக்கு ஆயுள் தண்டனை!!

Read Time:2 Minute, 58 Second

cb7330f1-c148-4cbd-bb28-663a6658c379_S_secvpfஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நஞ்சகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 26). இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களுக்கு பிரதீப் (3) என்ற மகனும், அர்ச்சனா (1½) என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் மேகநாதனுக்கும், அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரது மனைவி கலாமணிக்கும் (36) இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனால் கள்ளக்காதலர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இந்த நிலையில் கலாமணிக்கும் அதே பகுதியை சேர்ந்த கோபால் என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

இந்த விஷயம் மேகநாதனுத்து தெரிய வந்தது. இதனால் அவர் கள்ளக்காதலி கலாமணியை கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதைதொடர்ந்து கலாமணியை கொல்ல மேகநாதன் முடிவு செய்தார். அதன்படி கடந்த 26–11–2013 அன்று அப்பகுதியில் உள்ள வாய்க்காலுக்கு கலாமணியை மேகநாதன் நைசாக பேசி வரவழைத்தார். பின்னர் திடீரென கலாமணியை கழுத்தை கயிற்றால் இறுக்கினார். மேலும் கத்தியால் குத்தி கலாமணியை கொலை செய்தார்.

பின்னர் கலாமணி உடலை மறைப்பதற்காக அவரது உடலில் கல்லை கட்டி வாய்க்காலில் வீசினார்.

இந்த சம்பவம் பற்றி கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கிராம நிர்வாக அதிகாரியிடம் மேகநாதன் சரண் அடைந்தார். இதைதொடர்ந்து மேகநாதனை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றிய வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு, குற்றம் சாட்டப்பட்ட மேகநாதனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் மேலும் அபராதம் கட்ட தவறினால் 6 மாதம் ஜெயில் தண்டனையும் விதித்தார்.

மேலும் கலாமணியை கொன்று மறைத்த குற்றத்துக்காக 7 ஆண்டு ஜெயிலும், ரூ.1000 அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு வக்கீல் சுமதி ஆஜரானார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாறுமாறாக ஓடிய கார்: 6 பேர் படுகாயம்- வாலிபரை விரட்டி பிடித்து தர்மஅடி!!
Next post குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் சிங்கவால் குரங்குகள்!!