எனது கணவரை அடித்துக் கொன்று விட்டனர்: கருப்பசாமியின் மனைவி கண்ணீர்!!
Read Time:1 Minute, 16 Second
கருப்பசாமியின் மரணம் குறித்து அவரது மனைவி பழனியம்மாள் கூறியதாவது:–
எனது கணவர் சிறையில் உள்ள 1 ரூபாய் நாணயம் போட்டு பேசும் போனில் இருந்து கடந்த சனிக்கிழமை என்னிடம் பேசினார்.
அப்போது நான் நலமாக இருக்கிறேன். போலீசார் என்னை அடிக்கடி துன்புறுத்துகிறார்கள். நான் சமாளித்துக்கொள்கிறேன் என்றார்.
எனது கணவருக்கு எந்த உடல்நல பாதிப்பும் இல்லை. நன்கு ஆரோக்கியமாகத்தான் இருந்தார். ஊரில் இருந்த போது அவர் விவசாயம் செய்து வந்தார். சிறையில் தறியில் வேலை செய்தார்.
எனது கணவர் சிறை அதிகாரிகள் தாக்கியதில் தான் இறந்துள்ளார். இன்று காலை தான் என்னிடம் எனது கணவர் இறந்து விட்டார் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனது கணவரின் சாவுக்கான காரணம் தெரியும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம்.
மேற்கண்டவாறு பழனியம்மாள் கூறினார்.
Average Rating