ஒடிசாவில் அதிரடி சோதனை: ஒரே நாளில் 49 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!!
Read Time:1 Minute, 18 Second
ஒடிசா மாநிலம் கஞ்சம் மற்றும் கஜபதி மாவட்டங்களில் உள்ள சிறு தொழில் நிறுவனங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் 49 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்னளர்.
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் கண்காணிப்பு அதிகாரிகள் நேற்று பெர்காம்பூரில் உள்ள சிறு உற்பத்தி மற்றும் கரும்புச்சாறு தயாரிக்கும் கடைகளில் சோதனை நடத்தியபோது பீகாரைச் சேர்ந்த 20 சிறுவர்கள் உள்பட 22 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
இதேபோல் கஜபதி மாவட்ட அதிகாரிகள், பாரலகேமுண்டியில் உள்ள ஓட்டல்கள், பார்கள், வெல்டிங் பணிமனைகள் மற்றும் மோட்டார் கேரேஜ்கள் உள்ளிட்ட 17 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் 7 முதல் 18 வயதுக்குட்பட்ட 27 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட அனைத்து குழந்தைகளையும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
Average Rating