உத்தரப்பிரதேசத்தில் 15 வயது பெண்ணின் வயிற்றில் 5 அடி நீள தலைமுடி பந்து: அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்!!

Read Time:2 Minute, 15 Second

7233a983-891d-47a5-89e7-4b13cdaaf2d2_S_secvpfஉத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த 34 வயது பெச்சன் ராமின் மகளான 15 வயது கவிதா குமாரிக்கு ஒரு விநோத வியாதி உள்ளது. தனது தலைமுடியை சாப்பிடுவது மட்டுமல்லாமல், மற்றவர்களின் தலைமுடியையும் சேர்த்து சாப்பிடுவது தான் அவருக்குள்ள வியாதியாகும்.

வேளா வேலைக்கு உணவு அருந்துவதை காட்டிலும், தலைமுடி உண்ணுவது தான் அவளுக்கு பிடித்தாக இருந்தது. இப்படி தினமும் தலைமுடியை சாப்பிட்டதால் வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டது. மேலும் அவளால் தண்ணீரை மட்டுமே பருக முடிந்தது. இதனால் கவலையடைந்த கவிதாவின் பெற்றோர், அங்குள்ள சித்தார்த் பல்நோக்கு மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அழைத்து சென்றனர்.

அங்கு கவிதாவுக்கு சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்ததில், அவளுடைய வயிற்றில் ஐந்து அடி நீளத்திற்கு தலைமுடி பந்து இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் கவிதாவின் வயிற்றிலிருந்த தலைமுடி பந்தை அகற்றினர். தற்போது படிப்படியாக கவிதா உடல்நலம் தேறிவருவதாக மருத்துவர் பகதூர் சித்தார்த் கூறினார்.

இதில் விந்தை என்னவென்றால், கவிதாவுக்கு இப்படி ஒரு வியாதி இருக்க வாய்ப்பில்லை என்று அவளது தாயார் கூறுவதுதான். ஆனால் தலையில் இருந்து எப்போதாவது முடியை கவிதா எப்போதாவது பிய்த்து எடுப்பார் என்று அவர் ஒப்புக்கொண்டுள்ளார். எப்படியோ மருத்துவர்களின் தீவிர முயற்சியால் தற்போது கவிதா உயிர் பிழைத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கஞ்சா போதையில் 80 வயது மூதாட்டியை கற்பழித்த வாலிபர் கைது!!
Next post நாமக்கல் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது!!