நாமக்கல் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செம்மேடு கிராமத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
கொல்லிமலை பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் அந்த 14 வயது மாணவி கடந்த புதன்கிழமை மாலை பள்ளி முடிந்ததும் வீடு திரும்புவதற்காக பஸ் நிலையத்தில் தனது தோழியுடன் காத்திருந்தார். அப்போது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இளவரசன்(23) என்பவர், என் வண்டியில் ஏறிக் கொள்ளுங்கள், உங்களை வீட்டில் இறக்கி விடுகிறேன் என்று கூறினார்.
நாங்கள் பஸ்சில் போய்க் கொள்கிறோம் என கூறிய கூட நின்றிருந்த தோழி, அவரது அழைப்பை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்ட நிலையில் அந்த மாணவி மட்டும் அவருடன் பைக்கில் ஏறிச் சென்றார். போகும் வழியில் கொல்லிமலை அருகே ஒதுக்குப்புறமான பகுதியில் காலியாக இருந்த ஒரு வீட்டுக்கு அந்த மாணவியை கடத்திச் சென்ற இளவரசன், அந்த வீட்டில் வைத்து அவரை அடுத்தடுத்து கற்பழித்துள்ளார்.
பஸ்சில் ஏறி வீடு வந்து சேர்ந்த தோழி, வெகு நேரமாகியும் இந்த மாணவி வீடு திரும்பாததை கண்டு பதற்றம் அடைந்தார். நடந்த சம்பவத்தை அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் அளித்த புகாரையடுத்து, வழக்குப்பதிவு செய்து இளவரசனை தேடிவந்த போலீசார் இன்று அவரை கைது செய்தனர்.
இளவரசன் ஏற்கனவே திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்து, சமீபத்தில் விடுதலை ஆனவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Average Rating