ஆஸ்பத்திரி கழிவறையில் குழந்தை பெற்ற இளம்பெண்: கர்ப்பமாக்கிய வாலிபர் கைது!!
Read Time:1 Minute, 20 Second
தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று மதியம் 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண் வந்தார். 7 மாத கர்ப்பிணியாக இருந்த அவர் தனக்கு வயிறு வலிக்கிறது என்றார். டாக்டர்கள் ஊசி போட்டனர். பின்னர் அந்த பெண் கழிவறைக்கு சென்றார். அங்கு அவருக்கு இறந்த நிலையில் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் அந்த பெண் அங்கிருந்து சென்று விட்டார்.
அங்கிருந்தவர்கள் ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர்களிடம் கூறவே அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி அந்த பெண்ணை கண்டு பிடித்தனர்.
அவரிடம் விசாரித்த போது அந்த பெண்ணின் கர்ப்பத்துக்கு காரணம் பழனி ஆய்க்குடியைச் சேர்ந்த சித்தனாதன்(22) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சித்தனாதனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
Average Rating