திண்டுக்கல் அருகே மர்ம காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை பலி!!
Read Time:1 Minute, 15 Second
திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை மற்றும் குஜிலியம்பாறை பகுதியில் உள்ள கிராமங்களில் மர்மக்காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு சென்று தடுப்பு நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. வடமதுரை அருகே உள்ள முத்தனம்கோட்டையை சேர்ந்த சண்முகவள்ளி என்பவர் 3 வயது குழந்தை பிரனிஷாவும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அந்த குழந்தை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. முத்தனம்கோட்டையில் 20–க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Average Rating