பள்ளிக்கூட பஸ் மீது மரம் விழுந்து விபத்து: 5 மாணவ-மாணவிகள் பலி!!
Read Time:1 Minute, 6 Second
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த கோதமங்கலம் நெல்லிமட்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் நேற்று மாலை 4 மணிக்கு பள்ளிக்கூடம் முடிந்து வழக்கம்போல் பள்ளி பஸ்சில் வீடு திரும்பினர்.
மாணவ-மாணவிகள் பலரை அவர்களது வீட்டில் இறக்கி விட்டு 12 பேருடன் பஸ் கோதமங்கலத்தை அடுத்த குத்துக்குழி பகுதியில் சென்றபோது சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது அந்த பகுதியில் இருந்த ராட்சத மரம் ஒன்று பள்ளிக்கூட பஸ் மீது முறிந்து விழுந்தது.
இதில் பஸ்சில் பயணம் செய்த 5 மாணவ-மாணவிகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் பஸ்சில் இருந்த 7 மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர்.
Average Rating