ஆக்ராவில் பொது இடத்தில் சிறுநீர் கழித்த 109 பேர் கைது!!
Read Time:1 Minute, 12 Second
ஆக்ராவில் ரெயில்வே போலீசார்(GRP) நடத்திய அதிரடி சோதனையில் பொது இடத்தில் சிறுநீர் கழித்த 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ரெயில்வே சூப்பரண்டண்ட் கண்ணா கூறுகையில், “ ரெயில்வே நிலைய எல்லைகளில் அசுத்தம் செய்வது பொதுமக்களின் வழக்கமாகிவிட்டது. சரியான முறையில் சுத்தம் செய்யப்படும் ரெயில் நிலையங்கள் கூட பொதுமக்களின் நடவடிக்கையால் அசுத்தமாகிவிடுகிறது. எனவே இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடிக்க நேற்று முன்தினம் மேற்கொண்ட அதிரடி சோதனையில், 109 பேரைக் கைது செய்துள்ளோம்.” என்றார்.
கைது செய்யப்பட்டவர்கள் தாங்கள் செய்த குற்றத்தின் தன்மைக்கேற்ப ரூபாய் 100 முதல் 500 வரை அபராதம் கட்டிய பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
Average Rating