(அ)சிங்கமா? அல்லது ???? ஈபிடிபி டக்ளஸ்! (முன்னைநாள் ஈபிடிபி உறுப்பினரின் ஆக்கம் இது)

Read Time:9 Minute, 25 Second

daklas02.jpgசொந்த மூளை இருக்க வேண்டும் அல்லது செயற்திறனும் முற்போக்கும் கலந்த மனத்தைரியம் பொருந்திய செம்மலாக நடைபயில வேண்டும் அப்போது தான் அவன் சிங்கமாவான் அல்லது மாமாவே தான்… எங்கள் (அ)சிங்கமான டக்ளஸ்! பாராளுமன்றத்தை நோக்கி வீறுநடை போட்டுக் கொண்டு இருக்கும் வீணாகப் போன கட்சித் தலைவர்களில் டக்ளஸ் என்பவரும் ஒருவர் என்பது நாம் அறிந்த உண்மை. அவருக்கு ஆதரவான இணையதளங்களில் வருகின்ற கட்டுரைகளும் அடைமொழிகளும் எம்மால் தாங்க முடியவில்லை என்பதுடன் மிகுந்த மனவேதனையாகவே இருக்கின்றது. தங்களது (அ)சிங்கமான தலைவர் டக்ளஸை விட்டு ஓடிப் போனவர்கள் எத்தனை என்று கொஞ்சமாவது சிந்தனை இல்லாது எழுதும் ஆக்கக்காரர்களே.. மனிதனைப் பற்றி எழுதுங்கள் சிங்கம் என்று சொல்லி சீற்றம் இல்லாத சேற்று நரியை வர்ணிக்க வேண்டாம் என்று மிகவும் தாழ்மையாக மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம். முக்கியமாக நாம் அரசியல் ஆக்கங்களை எடுத்து எழுதுவதில்லை ஆனால் கடந்த காலத்தில் தலைவர் டக்ளஸ் என்று குறிப்பிட்டு ஒருசில காவடிகள் போடும் ஆட்டம் தலைவலியாகவே இருக்கின்றது. அவர்கள் சொற்பேறில்லாதவர்களும் சேரிகளில் வாழும் மனிதர்களை விட மிகவும் தரம் குறைந்தவர்களாகவே பழக்க வழக்கத்தில் இருக்கின்றார்கள் என்று வெளிப்படையாகவே சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். அதைத் தான் “ஊர்குருவி உயரப் பறந்தாலும் பருந்தாகுமா” என்று கேட்பார்கள்.

நாம் எதையும் விவாதிக்கலாம் எதையும் எழுதலாம் பழக்கவழக்கம் என்பது மற்றவர்களுக்காக காட்டும் நடையுடையல்ல. குறிப்பாக ஒரு குறிப்பிட்ட பகுதியினாரல் தலைவரெனக் கூறப்படுகின்ற பிரபாகரனை விட கேவலமான முறையில் நடந்து கொள்கின்றார் (அ)சிங்கமான தலைவர் டக்ளஸ் என்பதை புரிந்து கொள்ளுங்கள். புலிகள் பக்கம் குறிப்பிட்ட மக்கள் இருக்கின்றார்கள். நல்ல போராட்ட வீரர்கள் இருக்கின்றார்கள். புலிகளும் அவர்களுடன் சேர்ந்த எம்பிக்களும் பல சாதனைகள் படைத்தவர்கள் ஆனால் தனியாக எதையும் செய்யும் திறன் உடையவர்கள் என்பதை மக்கள் அறிவார்கள். மற்றும் டக்ளஸ் போன்றவர்கள் தங்களை சிங்கம் என்று சொல்லிக் கொண்டு சேற்று நரிகளை விட கேவலமாக நடந்து கொள்கின்றார்கள்.

(அ)சிங்கமான தலைவர் டக்ளஸ்க்கு அடுத்த தேர்தலில் எந்தவொரு வாய்ப்புக்களும் கிடையாது என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள் புலிகள் இன்று “வரி மற்றும் காணிபறிப்பு பணப்பறிப்பு ஆகியவற்றை விட்டு ஐனநாயகம் என்று சொல்லி ஏ9 பாதையையும் திறந்து விட்டால்” வடக்கே இருக்கும் இராணுவத்திற்கே சங்கு தான் அத்தோடு சிங்கம் என்று சொல்லும் தலைவர் டக்ளஸ் என்பவருக்கும் சங்கு தான் என்பதை மறந்து போகக் கூடாது.

அரசின் சின்னாக இருக்கும் தலைவர் டக்ளஸ்க்கே சிங்கம் என்ற எண்ணம் என்றால்? சிங்கத்திற்கு எப்படி இருக்கும்? பன்றி என்று குறிப்பிடும் எம்பிக்கள் எவ்வளவு துணிவுடன் இலங்கைக்குள் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தனியாகவே சென்று வருகின்றார்கள்.. நடமாடுகின்றார்கள்.. அப்படி என்றால் எங்கே உங்கள் சிங்கம் ஒருக்கால் யாழ் வழியே தனியே வந்து போகுமா? அதுபோகட்டும் சிங்கத்தின் சீற்றம் எப்படி என்று தெரியுமா? இல்லையா?? கண்டுதான் இருக்கின்றீர்களா??? அதுதான் இன்றைய தமிழர்களுக்கு இப்படி அழிவு சிங்கத்திற்கும் பன்றிக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் எல்லோரும் அமைச்சராகவும் ஆயுதப் புருஷர்களாகவும் இருப்பதால் தான் தமிழன் அழிகின்றான்.

ஏன் தலைவர் டக்ளஸ் வெளிநாடுகளுக்கு போகும் போதாவது எங்கேயாவது தனியாகப் போனாரா? இல்லையே அப்படி என்றால்?? எப்படி நீங்கள் அந்த சேற்று நரியை சிங்கம் என்று சொல்கின்றீர்கள்? எந்த அரசு வருகின்றதோ அந்த அரசின் சின்னாக அதாவது கூசா தூக்கும் காசு கொடுக்காத வேலைக்காரனாக சேற்று நரி வேசம் போட்டுக் கொள்வார் தலைவர்; டக்ளஸ் என்பதை நீங்கள் அறியவில்லையா?

ஏன்?? உங்களுக்கு ஒரு கதை தெரியுமா? தோழர் நாபா இறக்கும் முன் ஒற்றைக்கால் தளபதி கிட்டுக்கும் சேற்று நரி டக்ளஸ்க்கும் தொடர்புகள் இருந்தது மட்டுமல்ல பந்திகள் பரிமாற்றமும் நடந்தது. இப்படியாக மானம் கெட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு சேற்று நரியை போய் சிங்கம் என்று சொல்லி ஒப்பிட எப்படி உங்களுக்கு மனசு வந்தது? நாம் ஒருவிடயத்தை எழுத வேண்டும் என்று எண்ணிய பின் அது சரியாக எழுதினோமா என்று யோசிக்க வேண்டும் அல்லது எழுதியவரே முழுப் பன்றியாகி விடுவார். நீங்கள் எழுதிய சம்பாசனையை வடிவாக வாசித்துப் பாருங்கோ..

டக்ளஸை கண்டவுடன் ஓடி வந்து கைகுலுக்கி குசலம் விசாரித்தார் சிவாஐp எம்பி.
சுகமா இருக்கிறீர்களா அண்ணை?… என்றார் சிவாஐp எம்.பி.
ஓம்!…. நீங்கள்?…… என்றார் டக்ளஸ்!
நல்லாயிருக்கிறன்…… என்றார் சிவாஐp எம்.பி
எங்கை கன நாளா உங்களை காணயில்லை….. என்றார் டக்ளஸ்!
ஓம் அண்ணை!…. கொஞ்சம் சுகயீனம்…. என்றார் சிவாஐp!
இருவரும் பேசிக் கொண்டே பாராளுமன்ற சபைக்குள் நுழைந்து கொண்டனர்.

அப்படி என்றால் சிந்திக்க வேண்டும் பன்றிக் கூட்டத்துடன் சிங்கம் கை கொடுக்குமா? சுகம் விசாரிக்குமா?? சம்பாசனை வைக்குமா??? இல்லைத் தானே அந்தப் பன்றிக் கூட்டத்தோடு சேர்ந்து ஏதாவது ஒரு தகவல் கிடைக்குமா? என்ன நோக்கம்?? என்று ஏவல் பார்க்கத் தான் சேர்ந்து போனார் உங்கள் தலைவர் டக்ளஸ் அப்படி என்றால்? இப்படி சேர்ந்திருந்து குழிபறிப்பதில் மிகவும் கெட்டிக்காரத் தனம் யாருக்கு உண்டு?? நரிக்குத்தானே இதனால் தான் தலைவர் டக்ளஸ்! என்பவர் சிங்கம் இல்லை நரி என்பதை நாம் குறித்ததில் என்ன தவறு?.

முதலில் தலைவன் என்றால் என்ன? எதையும் தானாக கொண்டு நடத்தும் தைரியம். திட்டம் போட்டு நிர்வாகத்தை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து தன்னுடன் இருக்கும் மற்றவர்களையும் காப்பாற்றும் வல்லமை வேண்டும். அப்படியானால் இருக்கும் தலைவர்களுள் உங்கள் தலைவர் எப்படியாக நடந்து கொள்கின்றார் என்று சிறிதுநேரம் சிந்தித்துப் பாருங்கள் என்னைப் பொறுத்த வரைக்கும் டக்ளஸ்! என்பவர் ஒரு மாமா வேலை செய்பவராகவே கருத வேண்டும் அல்லது அசிங்கமாகத் தான் கருத வேண்டும் நீங்கள் எழுதிய கட்டுரையை திருப்பி திருப்பி டக்ளஸ்! உடன் சேர்ந்து இருந்து வாசித்துப் பாருங்கள் அதற்குப்பின் டக்ளஸ்! அசிங்கமா? மாமாவா?? சேற்று நரியா??? என்று முடிவுக்கு வாருங்கள் தோழரே…

முன்னைநாள் ஈபிடிபி உறுப்பினர் சங்கர்… (ஐரோப்பா)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மலையாளத்தில் மொழிபெயர்க்கப்படும் கமல்ஹாசன் திரைக்கதைகள்
Next post புலிகளின் தலைவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் சுகமான தூக்கம்.. தன்பிள்ளைகளை இழந்த வன்னிப் பெற்றோர்களின் மனங்களில் துக்கம்.. வெளிநாடுகளில் புலிப்பினாமிகள் மகிழ்ச்சி வெள்ளம்…