சிவகாசியில் திருமண ஆசை காட்டி மைனர் பெண் பலாத்காரம்: வாலிபர் கைது!!
Read Time:1 Minute, 21 Second
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருபவரின் மகள் கோமதி (வயது16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 14–ந்தேதி திடீரென வீட்டில் இருந்து மாயமானார்.
இதனால் பதட்டம் அடைந்த அவரது தந்தை மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கோமதி சிவகாசி லிங்கம்காலனியை சேர்ந்த சிவா என்பவரின் மகன் எபிரோ (20) என்பவருடன் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இதுகுறித்து கோமதியின் தந்தை சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், திருமண ஆசைக்காட்டி எனது மகளை கடத்தி சென்று எபிரோ பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த எபிரோவை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating